Sunday, September 11, 2011

பாரதி மொழிகள் பத்து


 

1 .எல்லா மதத்தினரும் ஒரே தெய்வத்தை தான் வணங்குறார்கள். லௌகிக விஷயங்களை போலவே மத விஷயத்திலும் ஒப்பு, விடுதலை, உடன்பிறப்பு இவை மூன்றும் பாராட்ட வேண்டும்.

2. அச்சம் இருக்கும் வரை நீ  அறிவாளியாக மாட்டாய்.

3. நீதி , சமாதானம், சமத்துவம் இவற்றாலே ,இவ்வுலகத்தில் தீராத தைர்யமும்  அதனால் தீராத அன்பும் எய்தலாம் ..

4. நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடா முயற்சி.மனதிற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை சித்தியாகும்.

5. ஒரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் எற்படுகின்றன.அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைர்யம் எற்படுகிறது.. கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புக வேண்டும்….

6. புதர் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக் கொண்டிருப்போமானால் , உலகத்து காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன..

7. மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம் சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஜெயம் அடையவொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம்.

8. விடுதலையே இன்பத்திற்கு வழி. விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமைடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கி பெருமை காண்பார்கள். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்…


9. உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால் உடம்பிலுள்ள நோய்களை தீர்த்து வலிமையேற்றுவதற்கு மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்.

10. துணிவு, உள்ளத்தூய்மை, எதாவதொரு மகத்தான லட்சியத்தில் அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நட்டங்களில் சிந்தனை இல்லாமை- இவைதான் யோகத்தின் ரகசியம்…

இன்று  பாரதி நினைவு நாள்…   நினைவு போற்றுவோம்…
பாரதியார் கவிஞர் என்பதையும் தாண்டி தத்துவதரிசனத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார் . இயற்கையின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்து அதன் முலம் எல்லையற்ற சக்தியை  தமிழர்கள்  அனைவரும்  பெற வேண்டும் என்பது அவரது  ஆவல். பாரதி பத்திரிக்கை ஆசிரியராக பல கட்டுரைகளையும்  கதைகளையும்  வடித்துள்ளார்… அதில் பல பொன்மொழிகள் உள்ளன. 

பாரதி பதிவு நினைவுகள்  இங்கே…. 

பாரதியின் பாடல்கள்  இங்கே  கேட்கலாம்..தீராத விளையாட்டு பிள்ளையோடும் கேட்கலாம்…  எங்கள் வலைப்பூவிலும் கேட்கலாம். தெவிட்டா தெள்ளமுது.

Powered By Blogger