1..நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
நட்பு, வேலை, காலைச்சூரியன்.
2. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.
தற்பெருமை ... சலிப்பு ….. சினம்
3. பயப்படும் மூன்று விஷயங்கள்.
வஞ்சம் … லஞ்சம்… பஞ்சம்
4. உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.
புத்தி , , மனம் , அறிவு
5. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
மடிக்கணினி, புத்தகங்கள் குறைந்தது இரண்டு, அலைபேசி
6.உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
திரையில் …. நாகேஷ் முதல் சந்தானம் வரை…
நாடகத்தில் … சோ… கிரேஸி என
எழுத்தில் …… வாத்தியார் சுஜாதா .. பாக்கியம் ராமசாமி என…
7. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
இரவு உணவு எடுத்துக்கொண்டே தொலைக் காட்சி பார்த்துகொண்டே புத்தகம் படித்துக் கொண்டே ( இன்னமும் இரண்டு கொண்டே க்கள் பதிவுக்காக மூன்றுடன் நிறுத்தி விட்டேன்)
8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
வாழ்க்கை முடியும் வரை காத்திராமல் நமக்கு முடியும் போதெல்லாம்
கல்விக்கு கஷ்டபடுபவர்கள்…சரியான மருத்துவத்திற்கு அல்லல் படுபவர்கள்… மனம் முழுவதும் நம்பிக்கையோடு பிறவியால் உடல் ஒத்துழைப்பற்றவர்கள்…
இவர்களுக்கு ஆர்ப்பாட்டம் சுயவிளம்பரம் இல்லாமல் உதவவேண்டும்…..
9.உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
பணியில் ஒருங்கிணத்து ஆற்றலான குழு உணர்வை எளிதில் உருவாக்குதல்..
அதிகம் பேசாமலே நண்பர்களை ஆட்கொள்தல்..
சொல்விரர்களை விட செயல்வீரர்களை எளிதில் அடையாளம் காண்தல்
10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
மரணம் …விபத்து… பொய்……
11.பிடிச்ச மூன்று உணவு வகை?
வெங்காய ஊத்தாப்பம்
எலுமிச்சை ரசம்
தயிர் சாதம் உடன் தொட்டுக்கொள்ள வெந்தய வத்தக் குழம்பு….
12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்
(மாறிக் கொண்டே இருக்கும்... சமிபத்திய முணு முணு மூனு )
ஆசை முகம் மறந்து போச்சே... பாரதி பாடல்
நீயும் நானும்....மைனா பாடல்
பார்த்த முதல் நாளாய் ....கமல் பாடல்
14. பிடித்த மூன்று படங்கள்?
பாமா விஜயம், ஹேராம்... அன்பே சிவம்...
15. இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்?
காற்று…..நீர் …. உணவு ……… உடல் வாழ
மனை .. நட்பு… சுற்றம் …… மனம் வாழ
வலை.... புத்தகம்..... அலைபேசி ……. உலகத்தில் உழல
16. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
முழுசா ஒரு புத்தகத்தை முடித்து விட்டு அடுத்ததை தொடுவது...
கணிப்பொறியை முழுமையாக கையாள்வது....
நன்றாக எழுதுவது எப்படி என்பதை ....
17. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
இதுவரை இத்தொடர் எழுதாதவர்கள்...
தொடர்பதிவு ஒவ்வாமையற்றவர்கள்...
அழைத்துவிட்டானே என்று திட்டாதவர்கள்...
பொறுமையாக படித்ததற்கு நன்றி நன்றி நன்றி