Sunday, October 17, 2010

``பத்து`` விஷயங்கள்


சுய முன்னேற்றம்,  ஆளுமைத்திறன், நேர்மறை உணர்வு  இவைகளில் இன்றைய இளைநர்கள் சற்று பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.... நடுத்தர வயதினரும் தாழ்வு மனப்பான்மையில் சடாரென சோர்வுக்குள்ளாகிறார்கள்.... கோடிக்கணக்கில் விற்பனையில் சாதனை படைத்த, நார்மன் வின்சென்ட் அவர்களின் ‘’ நேர்மறைசிந்தனையின் சக்தி’’  எனும் ஆங்கில புத்தகத்தில் கூறிய பல விஷயங்கள்,மேற்குறிப்பிட்டவைகளுக்கு தீர்வாக இருக்கும்.அதில் பத்து விஷயங்களை மட்டும் தமிழாக்கி, எனக்கும் உங்களுக்குமாக ஒரு பகிர்வு....


வித்தை தெரிந்த அளவுக்கு வியாபாரம் தெரியாமல் திக்கி, திணறிய காலத்தில் இந்த புத்தகம் எனக்கு மிக தெம்பைக் கொடுத்தது...
எனக்கு தெரிந்த வேலைகள் தேடி வந்தது. தெரியாத வேலைகளை கற்றுக் கொள்ள வைத்தது... நல்லதை நினைக்க நல்லது நடக்கிறது ...பத்துதானே, படித்து செயலாக்கித்தான் பார்ப்போமே.


      1 .``நான் வெற்றியாளன்`` எனும் பிம்பத்தை நன்றாக வடிவமைத்துக் மனதில் அழியாவண்ணம் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். அப்பிம்பத்தை மங்கவே விட வேண்டாம்.  தோல்வி எனும் சிந்தனையே ஒரு போதும் வர விட வேண்டாம்

   2.  எப்பொழுதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதோ அப்பொழுதே, உரத்த குரலெழுப்பி ஒரு நேர்மறை எண்ணம் கொண்டு எதிர்மறை எண்ணத்தை அழித்து விடுங்கள்.

   3. கற்பனையில் கூட தடைக்கோட்டைகள் கட்ட வேண்டாம்.  தடைகளை பற்றிய எண்ணங்களை மட்டுபடுத்திக் கொண்டே வரவேண்டும்.  தடைகள் என்னவென்பதை திறம்பட தெரிந்து கொண்டு, தடைகளை பயம் கொண்டு ஊதி பெரிதாக்காமல் அறிவு கொண்டு தகர்த்த பார்க்க வேண்டும்.

   4. மற்றவர்களை ஒப்பிட்டு, பிரமிப்பதோ அவர்களை அப்படியே நகலெடுப்பதோ வேண்டாம். அப்படி பிரமிக்க வைப்போர்களில், பெரும்பாலனவர்களின் வெளித்தோற்றமும், செயல்பாடுகளும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு பயயுணர்வை மறைப்பதற்காகவே இருக்கும்..மற்றவர்களை க்காட்டிலும் நாம் திறமை மிக்கவர்களே எனும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

      5``கடவுள் நமக்காக இருக்கும் பொழுது , நமக்கு எதிர்ப்பாக யார் இருக்க முடியும் ```மனதிற்கு தெம்பளிக்கும் இந்த வார்த்தைகளை , ஒரு நாளைக்கு பத்து முறை சொல்லி வாருங்கள்  ( இப்பொழுதே ஆரம்பியுங்கள்...மெதுவாக..... அதே சமயத்தில்  நம்பிக்கையாக )

    6. எந்த செயலாகிலும், ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம் ? என்பதை புரிந்து செயல்பட நல்ல தரமான ஆலோசகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்... தாழ்வு மனப்பான்மையின் ஊற்றுக்கண்ணை அறிந்து கற்ற அறிவு கொண்டு கலைந்து விடவேண்டும்.

     7. இந்த பயிற்சியையும் தினம் பத்து முறைசெய்து பாருங்கள்.. முடிந்தஅளவுக்கு சத்தமாக,பிரகடனமாக சொல்லிப்பாருங்கள் .                எனக்கு பலம் அளித்து வரும் இறையெனும் பேராற்றலின்மூலம் என்னால் எதையும் சாதிக்க முடியும் ``
இந்த மந்திர சொற்றொடர் பூமியில் தாழ்வு மனப்பான்மையை தகர்க்க வல்ல அதி சக்தி வாய்ந்த சொற்றொடர். 
8.உங்களிடம் உள்ள திறமைகளை உண்மையாக மதிப்பிடுங்கள்.. அந்த திறமையை பத்து ,பத்து சதமாக கூட்டிக் கொண்டே வாருங்கள்.

     9. இன்று செய்யக்கூடியதை, செய்யமுடிந்ததை நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம். முடிக்கப்படாத குவிந்த வேலைகள் தினத்தை இன்னமும் கடினமாக்கும்.

10.இந்த ஒரு சொற்றொடரை  அட்டையில் எழுதி அலுவலகத்தில் தொங்க விடுங்கள், சவர / அலங்கார க்கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.மேசைக்கண்ணாடிக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள் .முடிந்தபோது படித்தும் வாருங்கள்.முக்கியமாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்
எவ்வளவு உயரமாக இருந்தாலும் முதலில் உங்கள் ``மனதை`` அந்த குறுக்கு கம்பிக்கு மேலே முழுமையாக வீசுங்கள் ; உடல் எளிதாக பின் தொடர்ந்து, அழகாக வளைந்து அந்த உயரத்தை தாண்டி விடும்...



Powered By Blogger