Saturday, February 27, 2010

சுஜாதா -- ஒரு தொடரும் சகாப்தம்

இன்று மட்டும் தான் என்று இல்லாமல் என்றும் நினைவில் இருக்கும் சுஜாதா ஒரு தொடரும் சகாப்தமாகவே இருக்கிறார் .

நாம் இந்த வலைப்பூக்களில் எழுதுவதும் ,ஒருவருக்குஒருவர் தொடர்பு கொள்வதும் எதற்கு ? மனதிற்கு ஒரு இதம் ,சுவாரசியம் மற்றும் நம் ரசனைகளுக்கு அழகான வெளிப்பாடு . இதைத்தான் சுஜாதா அவர்கள் எழுத்து துறையிலே செய்தும் செய்யவைத்தும் வந்தார் .

கதையாகட்டும் , கட்டுரையாகட்டும் நம்பி வந்த வாசகனின் ஆர்வத்திற்கு கண்டிப்பாக செய்தி வைத்திருப்பார் . பல துறைகளிலும் உள்ள விஷயங்களை தமிழனுக்கு எட்டவைப்பதில் அவர்க்கு ஒரு தணியாத ஆவல் இருந்தது ..

படைப்புகள்  சிலவற்றை பற்றி  ஒன்றிரண்டு வரிகள்

சிலிக்கனின் சில்லு புரட்சி  ---  நாங்களெல்லாம்   அப்பொழுதுதான்  சில்லுக்கு  புதிது ..தினமணி கதிரில்   வரும் ..  கோவை  குப்பகோனாம் புதூர்  நூலகத்தில்  அந்த புத்தகத்தை எடுத்தவர் எப்பொழுது  வைப்போரோ  என்று சுற்றியும் ஐந்து  பேராவது இருப்போம் .. அப்படியே  அறிவியல் , கதை  ஆர்வம் கூடி   ஆர் .எஸ் புரம் மத்திய நூலகம் வரை   சைக்கிளை  மிதிக்க வைத்தது .

பிரிவோம் -சந்திப்போம் தலைப்பே கவிதையாக , ரகு, மதுமிதா , ரகுஅப்பா , ராட்.....அவர்களோடும் , அவர்களுக்கான உணர்வுகளோடும் சில காலம் வாழ்ந்தோம் என்று தான் சொல்லவேண்டும் . ரகுவோடு ஏங்கி, மதுமிதாவை ரசித்து ,ரகுவின் அப்பாவிடம் அறிவுரைகள்  பெற்று  அந்த  பொதிகை  மலையில்  உற்சாகமாக  இருந்தோம் . பின் அவளை திட்டி ,ரகுவோடு  அமெரிக்கா சென்று , அவளின்   அப்பாவித்தனத்திற்க்கு   தலையில்  அடித்து கொண்டு   ஊர் முழுவதும் சுற்றினோம். அவளுக்கு ராட். முலம் கிடைத்த  அடிக்கு      ''அப்படித்தான் வேணும்'' என்று ஒரு சாரர் நினைத்தோம்  , ரகு கண்டுகொள்ளகூடாது என்று ஒரு சாரரும் ,  அவளை எப்படியாவது ராட் டிடமிரிந்து காப்பாற்றவேண்டும் என்று   ஒருசாராரும் ,  ஒருபடி மேல போய்   ரகுவோடு  அவள் மீண்டும் இணைந்து விடவேண்டும்  ஒரு சாரரும்   நினைத்தோம் ...  கல்லூரி காலங்களில் எங்களுக்கு கிடைத்த  மதிய வேப்பமரத்தடி உணவோடு  பகிர்ந்துகொள்ளும்  சுவாரசியம் .  இன்று படித்தாலும்  அதே புத்துணர்வு .

ஏன்? எதற்கு ? எப்படி?   -  அந்த காலத்திலேயே   கூகிள் ஆண்டவரின் பணி.  எல்லாவற்றிலும் ஆர்வத்தை கிளப்பியது . மயில்  தொகை விரிப்பிலிரிந்து, குவாண்டம்  ,ஐன்ஸ்டீன்   தியரி   என்று  பலதுறைகளிலும்   மேலும்  மேலும் படிக்க வைத்தது. சில மிரண்டு ஒதுங்கிய விஷயங்கள் கூட  நட்பாகியது . இன்று  ''நேனோ''வ்வையும்  ''எம்படட்'' தொழில் நுட்பத்தையையும் திகைப்பு  இல்லாமல்  நெருங்க முடிகிறது . வரப்போகிற   டி.இ. டி  ஆறாம் அறிவு ஜல்லியடிகளையும்  எதிர் கொள்ளமுடியும்..

ஸ்ரீரங்கத்து தேவதைகள்  -அத்தனையும் உற்சாகம் புரளும் கதைகள் , வரிக்கு வரி நகைச்சுவைகள், கடைசியில் தீர்க்கப்படும் மர்மங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..அதில் சோக ரசத்தையும் தவறவிடாமல் ஒருகதை (மாஞ்சு ) வரும் அதில் ஒரே ஒரு வரி அவ்வளவு கூட இல்லை அரை வரியில் படிக்கும் அனைவருடைய இதயங்களையும் ஒரு சுத்திகரிப்பு செய்வார் .. அங்குதான் நாம் '' கதைசொல்லி'' க்கான இலக்கணத்தை பார்ப்போம் .. ( கதை சொல்லி --- நன்றி - எஸ் . ரா வின் பதம் - இனிமையான சொல்லாட்சி)

இப்படி நிறைய  இருக்கிறது ......  சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

மற்றவர்களின்  சிறப்பான  படைப்புகளை   அடையாளம்   கண்டு   சொல்வதில் அவருக்கு  நிகர்  அவர்தான் .  அதனாலேய   ஜெயகாந்தனை  படித்தோம் அதன் தொடர்ச்சியாக பாலகுமாரன்   அதே  ஆர்வத்தில்  எஸ் .ரா , முருகன் , என்று பிரபலமானவர்களையும்   பின்னர் நன்றாக  எழுதும்  புதியவர்கள்  படைப்பிலும் ரசனையான விஷயங்களையும்   ரசிக்க முடிகிறது .

 தனிமனித துதி என்று  சொல்லிக்கொள்ளும்  சுயஉணர்வு  சற்று கூடியவர்களுக்கு   சொல்லவிரும்புவது , சுஜாதா  என்றுமே  இயக்கமாகவே இருந்திருக்கிறார். அவரும் அவரை சுற்றிலும்  தமிழின் பன்முக ரசனைகள் என்றுமே இருக்கும். அவரை பற்றி பேசுவதோ , எழுதுவதோ  நிச்சயமாக  நம் ரசனைகளுக்கு , தமிழார்வத்திற்கு  போட்டுக்கொள்ளும் துதி..  அப்படியே தனிமனித துதித்தாலும் என்ன தவறு ? 
தன் வாசகனின் ஆர்வத்திற்கு  , அறிவிற்கு   தீனி  போட  எத்தனையோ  தூக்கத்தை இழந்து படித்து,எழுதி இருப்பார் .

கட்டம் கட்ட நினைத்தவர்களிடமும்       , ஒரு  கட்டத்திற்குள் மட்டும்   சிக்க வைக்க முனைபவர்களிடமும்   அவர் என்றுமே  சிக்கியது  இல்லை .   சுஜாதா  ''அந்த வானத்தை போல '' எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு    அவரை பற்றி  வரும் பதிவுகளும்   அதன்  பின்னூட்டங்களுமே சாட்சி ( சற்றுமுன்னர்  கிடைத்த  உ -ம் நர்சிம்   , ராதா கிருஷ்ணன் .....இன்னமும் வரும் )

வாசகனையும்  எழுதவைக்கும்  அவர் ஒரு  மானசீக எழுத்தாசான் ... வாசிப்போம்  ஆனந்தமாக ......




Wednesday, February 10, 2010

ஒரு சுட்டி நரி குதித்து ஆடுகிறது .......சுவாரசியங்கள் ..... ரசியுங்கள்

அமெரிக்க நண்பர்  ஒருவர்   தெற்கு  பேரிங்டன்  நகரத்தில்  இருந்து   , மின் அஞ்சல் வழியாக கடவுள் , பிரபஞ்சம் ,  டி . என்.  எ  ,  பைனரி     என்று சில நாட்களாக எனக்கு  பாடம் நடத்தி வருகிறார் ... மிக மிக ஆழமாக போய்கொண்டிருக்கிறது .. பயப்படவேண்டாம்     இந்த பதிவு அதை பற்றியது அல்ல ... நேற்று அதில் ஒரு வாக்கியத்தை போட்டு சில குறிப்புகள் எழுதி இருந்தார் .

''The quick brown fox jumps over the lazy dog"

What are the chances of that sentence occurring by random  chance?
It's easy to find the answer. It has 43 letters and spaces.
Excluding things like apostrophes and semicolons and numbers,
there are 26 upper case letters and 26 lower case letters to
choose from. So there are 52 to the power of 43 possible
combinations of letters.
52^43 = 6.139652×10^73
Which means the chances of this sentence occurring randomly are 1 chance in
61,396,520,000,000,000,000,000,000,
000,000,000,000,000,000,000,000,
000,000,000,000,000,000,000,000.
(There are only 10^80 particles in the universe.)
இப்படி  போய் கொண்டே  இருக்கிறது .........  கவலை வேண்டாம்.. இதில் ஆழமான பகுதிக்கு செல்லவில்லை , அந்த வாக்கியத்தை மட்டும் பிடித்து கொண்டேன் .. .
 எந்த ஆங்கில சொற்றொடர் படித்தாலும் , அதை தமிழ் படுத்தி பார்ப்பது . மிண்டும் அதை முடிந்தவரை மிக அழகாக சுருக்கமாக தமிழில் மாற்றுவது எப்படி என்று யோசிப்பது, எனக்கு சிறு வயதில் இருந்தே தொடரும் ஒரு(ந/ கெ) பழக்கம்.. அப்படி இந்த வாக்கியத்தையும் மொழி பெயர்த்து பார்த்தேன் ..


''The quick brown fox jumps over the lazy dog"

'' ஒரு சுட்டி பழுப்பு நரி, ஒரு சோம்பேறி நாயின் மேல் குதித்தாடுகிறது '' இந்த வாக்கியத்தில் அவ்வளவு சுவாரசியம் பிடிபடவில்லை .. அப்படியே விட்டு விட்டேன் .
பின் சில மணி நேரம்      கழித்து , வலைபூக்களை , பார்வை இட்டு வரும்பொழுது ,ஒரு  ஆஸ்திரேலிய  பதிவர்  ,ஒரு பதிவில் ,கணினி  வித்தைகள் , மாய,மந்திரங்கள் என்று தலைப்பிட்டு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார் .... அத்தனையும் சுவாரசியமாக இருந்தது .

அதில் ஒன்று , நீங்கள்  பயன்படுத்தும்   word 2003  இல்  = rand ( 200,99 ) என்று தட்டி enter யை தட்டுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.  (   word 2007   காரர்களுக்கு  கிழே  )
அப்படி செய்தவுடன் ஒரு ஆச்சர்யம்... பக்கம் முழுவதும் , சுட்டி  பழுப்பு நரி , நாயின் மேல் குதித்து  ஆடி  கொண்டே இருந்தது .... ஆங்கில எழுத்துக்களில்

நீங்களும்  தட்டி பாருங்கள் .....

இந்த   ஒருசேர்  நிகழ்வு எனக்குள் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, அந்த வாக்கியத்தின் சுவாரசியத்தை கூட்டியது .

அப்புறம் அந்த வாக்கியம் , ஆங்கிலத்தில் ஒரு பிரபல ''பாட போதிப்பு'' வாக்கியம் என்றும் , ஒரு ஆங்கில  அனைத்தெழுத்து  வாக்கியம் என்று வலையின் வாயிலாக அறிந்தேன் .... இதில் 26 ஆங்கில எழுத்துக்களும் வரும் . இது LKG ,UKG லேயே Pangram   என்று சொல்லிகொடுக்கிறார்களே என்றும் குறிப்பிட்டிருந்தார்கள் ... நான் தான் LKG ,UKG படிக்கவில்லையே.. நேராக அரசு ஆரம்ப பள்ளியில் ஒண்ணாம் வகுப்பு .ரெண்டாம் வகுப்பு  .................

மேலே அந்த சொற்றொடர் ஆராய்ச்சியில் (??) ஈடு பட்டபொழுது .இந்த சொற்றொடர் கணினியில்
 Word 2003 லும் அதற்க்கு முந்தைய word பதிப்பு களிலும் பத்தி / வாக்கியம் மென் பொருள் சோதனைக்கு , இந்த வாக்கியத்தை பயன்படுத்தி வந்தார்கள் / வருகிறார்கள்
Word 2007  இல்  வேறு புதியது புதியதாக வாக்கியங்கள் வந்து விழுகிறது .  Word 2007 லும்  சுட்டி  நரியை நாயின் மீது குதிக்க வைக்கலாம்.  அதற்க்கு    = rand.old ( ) பயன் படுத்த வேண்டும் .

இதை + 2 விலேயே படிக்கலாம் என்கிறார்கள் . கொடுமை நான் +2 வும் படிக்கவில்லை  பத்தாம் வகுப்பிற்கு  பின்   நேரே பட்டயம் , அப்புறம் பட்டம் .

ஆங்கில தட்டெழுத்து   கற்று கொடுக்கும் நிலையங்களும், இந்த வாக்கியத்தை பயன் படுத்தி வேகப்பயிற்சி கொடுப்பார்கள் என்றும் படித்தேன்.. ஆனால் என் போன்ற (வெட்டி) பந்தா பொறியாளர்கள் முறையாக தட்டெழுத்து  கற்றுக்கொள்ளாமல் கடைசிவரை ஒற்றை விரலிலேயே ஓட்டுவோம் .

எப்படியோ ''சுட்டி நரி வாக்கியம் '' எதேச்சையாக இரு வித்தியாசமான இடங்களில் வந்து என் ஆர்வத்தை தூண்டியது..
                                                                                                                                                                                                                                                                                                                    
என்  ஜோட்டு மக்களுக்கு  நிச்சயம்  ஆர்வமாக இருக்கும்...  ''The quick brown fox jumps over the lazy dog"  இந்தவாக்கியம்  பல  லட்ச கணக்கான    வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளது....  நிறைய  வியாபார  அடையாளமாகவும் , முத்திரையாகவும்    .......



வாசிப்பது ஆனந்தம். அப்ப வாசிக்காம விட்டதும், இப்ப ஆனந்தம்.

ஆங்கிலம் போன்று , அனைத்தெழுத்து வாக்கியம் 247 எழுத்துள்ள தமிழில் சாத்தியமா ? ஏன் இல்லை ? நமது ஏதோவொரு கழக கட்சி பொது கூட்டத்திற்கு போனால் ,'' வட்டங்கள்'' சதா அனைத்தெழுத்து வாக்கியமாக உதிர்த்து  கொண்டே  இருப்பார்கள்....  சோடா  அடித்து  நீட்டும் வரை ..... என்ன? கொஞ்சம் நிறையவே '' பேட் வேர்ட்ஸ்'' இருக்கும் அவ்வளவு தான்.

இதில் மிகுந்த சுவாரசியப்பட்டவர்கள் நிஜமாகவே ஒரு பழுப்பு சுட்டி நரியை நாயின் மீது குதிக்க விட்டு படமும் எடுத்துள்ளார்கள் .. பாருங்கள் கிழே உள்ள  சுட்டியை தட்டி ...

Powered By Blogger