ஆர்.வீ.எஸ் அவர்களின் இசைஞானி பதிவும் , அப்பாதுரை அவர்களின் திருவாசக விருப்பமும் தூண்டிவிட, மனம் நேராக திருவாசக பாடல்களுக்கு மறுபடியும் கொண்டுபோய் விட்டது. திருவாசகத்தை உள் புக வைக்க இனிய வழி செய்த இசைஞானிக்கு புயங்க பெருமானின் அருள் என்றும் உண்டு….
இந்த ஆல்பம் வெளி வந்து சற்று காலம் ஆனாலும் சலிப்பில்லா இசைப் பயணமாகவே தொடர்ந்து வருகிறது.. தட்டினாலும் , ஊதினாலும் , இழுத்தாலும் வரும் இசைக்கு எத்தனை எத்தனை நெறிமுறைகள் ... கோட்பாடுகள் ....ஒழுங்குகள் ....ராஜா அதை ஓரு இறை வழிபாடாகவே கடை பிடிக்கிறார்.... இதை சிம்பனி என்றும் அரட்டோரியா என்றும் இசை விற்பன்னர்கள் வாதித்து கொள்ளட்டும் .. என்னை போன்ற பாமரனுக்கு காதுக்கும் மனதுக்கும் இதமான ஓசை யாக இந்த இசை அமைந்துள்ளது ... இதில் இரண்டு பாடல் கேட்போம் ...
முதல் பாடலாக பூவார் சென்னி மன்னன் ..... ஓரு விடுதலை வேட்கையோடு கேட்போர் அனைவரையும் யாத்திரையாக கோஷம் முழங்க அழைத்து செல்லும் பாடல் '' நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே …
தன் மகள் பவதாரிணியோடு சேர்ந்து பாடிய பாடல்... தும்பியை தூது விடும் பாடல் . பவதாரிணி சினிமா பாட்டுக்களை விட சிரத்தை எடுத்து பாடிய பாடல். வெண்பா பிரியர்களுக்கு நல்ல தமிழ்த்தீனி. திருவாசகத்தில் தும்பித்தூது வெண்பாக்கள் இருபது. அந்த வெண்பாக்களில் 10 க்கு மட்டும் மெட்டமைத்திருக்கிறார். அந்த வெண்பாக்கள் உள் சென்ற மகிழ்வில் 20க்கும் மெட்டமைத்து பாடியிருக்கலாமே எனும் ஏக்கம் தோன்றும்…. இரண்டு வெண்பா கிழே
நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனாருடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றுதாய் கோதும்பி……..
உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களி வந்த வான் கருணை
வெள்ளப் பிரான் என் பிரான் என்னை வேறே ஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றுதாய் கோதும்பி……..
<
வந்தது வந்தோம்..இன்னமும் கொஞ்சம் இசை நதியில் நீந்தலாம் என்று
அப்படியே இசை ஞானியின் எனது அனைத்துக்கால விருப்ப பாடலான காற்றில் எந்தன் கீதம் யூட்டியில் தேடியபொழுது கிடைத்தது இந்த உற்சாகக் கோப்பு.. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குமுன் ஜானி படத்தில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் ஸ்ரீதேவி யின் மேடைப் பாட்டு. நேர்முகமாக அதே ராஜா இசையமைக்க பாடிய ஷ்ரேயா கோஷலின் வியக்கவைக்கும் குரலில் அமைந்த பாட்டு.. பிசகாத உச்சரிப்பு… முன்றுவகை ல,ள,ழ க்களும் மிகச் சரியாக வந்தது
அலை போல …… அன்புள்ள நெஞ்சை …… வாழும் காலம்
தமிழர்களே தள்ளாடும் பொழுது, இந்திக்காரரிடம் இவ்வளவு அழகான எழுத்து சுத்தமாக அமைந்த உச்சரிப்பு சுத்தம் நிச்சயம் மதி மயக்கும்..
உச்சரிப்பு சொல்லி கொடுத்தவர்க்கும் ...அதை சிரத்தையாக கேட்டு பாடியவர்க்கும் ஓரு பெரிய ''ஓ '' போட வைக்கிறது .
உச்சரிப்பு சொல்லி கொடுத்தவர்க்கும் ...அதை சிரத்தையாக கேட்டு பாடியவர்க்கும் ஓரு பெரிய ''ஓ '' போட வைக்கிறது .
உச்சரிப்பில் ஆழ்ந்து இன்னோரு பாட்டையும் கேட்க வைத்தது.. இது இசைப்புயலின் ராக அமைப்பில் இசைத்துணையில்லாமல் ஒரு நாலுவரி அதே கோஷலிடமிருந்து
இப்பதிவின் இசைப் பயணத்தை சிங்கார வேலனை அழைத்து நிறைவுசெய்யலாம் ...இந்த பாட்டை ஆயிரம் முறை கேட்டாலும் இன்னமும் ஒரு முறை தாராளமாக கேட்கலாம்... கேட்டுட்டு சொல்லுங்க...